Wednesday, April 10, 2024

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும் பற்றிய பதிவுகள் :*
ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு கடவுளின் அம்சத்தைப் பெற்றிருக்கும். அதேப்போல் நிறைய மரங்கள் சாத்வீக சக்திகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் எந்த மரத்தை வளர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

*துளசி :*

துளசி மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசியிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும். 

*சந்தன மரம் :*

சந்தனமரம் மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றது. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.

*ஆத்திமரம் :*

அத்திமரம் தத்தாத்திரேயின் அம்சமாகும். மஹாவிஷ்ணுவும் இதில் குடியிருப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மன சாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். 

*மாமரம் :*

மாமரம் மஹாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுப காரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது.

*அரச மரம் :*
அரச மரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கீழ் தீபம் ஏற்றி வலம் வர புத்திர தோஷம் நீங்கும்.

*ஆல மரம்:*

ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும்.

*மருதாணி:*

மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு வைத்துக் கொண்டால் கெட்ட கனவுகள் வராது.

*ருத்ராட்ச மரம்:*

ருத்ராட்ச மரம் சிவனின் அம்சமாகும். ருத்ராட்ச கொட்டையை அணிந்து கொண்டால் ரத்தம் சுத்தமாகும். ரத்த அழுத்தம் சீராகும் .கோபம் குறையும். மனதில் சாந்தம் உண்டாகும்.

*வேப்பமரம்:*

வேப்ப மரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தை சுற்றி மஞ்சள் , குங்குமம் பூசி மஞ்சள் ஆடையை கட்டி மாலை சூட்டி மரத்தை வலம் வந்து வணங்கினால் சக்தியின் அருள் கிடைக்கும்.

*வில்வ மரம்:*

வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

ஓம் நமசிவாய
இரா. இளங்கோவன்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...