Monday, November 24, 2025

நவக்கிரகங்கள் அவற்றின் நன்மைகள்

நவக்கிரகங்கள் 
*1.சூரியன்.*
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். 
திக்கு - கிழக்கு 
அதிதேவதை - அக்னி 
ப்ரத்யதி தேவதை - ருத்திரன் 
தலம் - சூரியனார் கோவில் 
நிறம் - சிவப்பு 
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை 
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு 
ரத்தினம் - மாணிக்கம் 
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

*2.சந்திரன்.*
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு 
அதிதேவதை - ஜலம் 
ப்ரத்யதி தேவதை - கௌரி 
தலம் - திருப்பதி 
நிறம் - வெள்ளை 
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல் 
மலர் - வெள்ளை அரளி 
வஸ்திரம் - வெள்ளாடை 
ரத்தினம் - முத்து 
அன்னம் - தயிர் சாதம் 

*3 . அங்காரகன் (செவ்வாய்)*
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி. 
திக்கு -தெற்கு 
அதிதேவதை - நிலமகள் 
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில் 
நிறம் - சிவப்பு 
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை 
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி 
வஸ்திரம் - சிவப்பு ஆடை 
ரத்தினம் - பவளம் 
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம் 

*4.புதன்.*
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. 
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி 
திக்கு - வட கிழக்கு 
அதிதேவதை - விஷ்ணு 
ப்ரத்யதி தேவதை - நாராயணன் 
தலம் - மதுரை 
நிறம் - வெளிர் பச்சை 
வாகனம் - குதிரை 
தானியம் - பச்சைப் பயறு 
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை 
ரத்தினம் - மரகதம் 
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம் 

*5.குரு.*
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர். 
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி. 
திக்கு - வடக்கு 
அதிதேவதை - பிரம்மா 
ப்ரத்யதி தேவதை - இந்திரன் 
தலம் - திருச்செந்தூர் 
நிறம் - மஞ்சள் 
வாகனம் - மீனம் 
தானியம் - கடலை 
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம் 
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல். 

*6.சுக்கிரன்.*
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம், 
துலாம் ராசிகளுக்கு அதிபதி. 
திக்கு - கிழக்கு 
அதிதேவதை - இந்திராணி 
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன் 
தலம் - ஸ்ரீரங்கம் 
வாகனம் - முதலை 
தானியம் - மொச்சை 
மலர் - வெண் தாமரை 
வஸ்திரம் - வெள்ளாடை 
ரத்தினம் - வைரம் 
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

*7.சனி*
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும். 
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி. 
திக்கு - மேற்கு 
அதிதேவதை - யமன் 
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி 
தலம் - திருநள்ளாறு 
நிறம் - கருமை 
வாகனம் - காகம் 
தானியம் - எள் 
மலர் - கருங்குவளை, வன்னி 
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை 
ரத்தினம் - நீலம் 
அன்னம் - எள்ளுப்பொடி சாதம் 

*8.ராகு*
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர். 
திக்கு - தென் மேற்கு 
அதிதேவதை - பசு 
ப்ரத்யதி தேவதை - பாம்பு 
தலம் - காளத்தி 
நிறம் - கருமை 
வாகனம் - நீல சிம்மம் 
தானியம் - உளுந்து 
மலர் - மந்தாரை 
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை 
ரத்தினம் - கோமேதகம் 
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம் 

*9.கேது*
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர். 
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன் 
ப்ரத்யதி தேவதை - பிரமன் 
தலம் - காளத்தி 
நிறம் - செம்மை 
வாகனம் - கழுகு 
தானியம் - கொள்ளு 
மலர் - செவ்வல்லி 
வஸ்திரம் - பல நிற ஆடை 
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்

*நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன.*
இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.

*காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

*நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.

*தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

*கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.

*கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

*தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.

* வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

*வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

*தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

*வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

*பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.

*16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

*பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

*அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

*சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

*இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

*வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்

*நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்.*

1.) ஸ்ரீ சூரியன் காயத்ரீ:-ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரீ:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.

4.) ஸ்ரீ புதன் காயத்ரீ:- ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.

5.) ஸ்ரீ குரு காயத்ரீ:- ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.

6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ:- ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.

8.) ஸ்ரீ ராகு காயத்ரீ:- ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.

9.) ஸ்ரீ கேது காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்

சகல விதமான தோஷங்களின் வீரியத்தை குறைக்க நவகிரக ப்ரீத்தி செய்து கொள்ளுங்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...